Header Ads

இலங்கையில் கொரோனா பாணி தயாரித்தவரால் மீண்டும் ஏற்படும் சர்ச்சை …

 


இலங்கையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஆயுர்வேத முறையில் கேகாலையை சேர்ந்த தம்மிக்க என்பவர் பாணி ஒன்றை தயாரித்து அதனை மக்களிடத்தில் விநியோகித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் கேகாலை தம்மிக்கவின் வீட்டிற்கு பேராதனை வைத்தியசாலையில் வைத்தியர் ஒருவர் சென்றுள்ளார்.

அங்கு தம்மிக்க தன்னை திட்டி அச்சசுறுத்த ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் தன்னை தாக்கியதாக வைத்தியர் பேராதனை பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதற்கமைய கேகாலை பிரிவு பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கேகாலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.