Header Ads

இலங்கையில் மோட்டார் சைக்கிள் பாவணையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

 


இலங்கையின் பல பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகளவில் ஏற்படுகின்றது.

இவ்வாறான திருட்டு கும்பலை கண்டுப்பிடித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மாத்திரம் 6 மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.

இந்த திருட்டு சம்பவங்கள் கும்பலாக இணைந்து மேற்கொள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அதன் உரிமையாளர்களிடம் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் போது அவதானமாக செயற்படுமாறு அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.