Header Ads

கொரோனா சிகிச்சை முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுப்பிடிப்பு!


 

இலங்கையில் பூனானி கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிசிக்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

நேற்றிரவு 7.30 மணியளவில் தொற்றாளர் தப்பிச் சென்றுள்ளாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தப்பி சென்றவர் 43 வயதுடைய எஹேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021.01.13 அன்றைய தினம் குறித்த நபர் பீசீஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின் அவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதியாகியுள்ளது.

அதற்கமைய 17ஆம் திகதி அவர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் பூனானி கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

தற்போது எஹலியகொட பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.