Header Ads

மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த இளம் தாய்


 

இலங்கையில் ஜாஎல பிரதேசத்தில் தனது மகளுக்கும் மற்றுமொரு சிறுமிக்கும் ஒன்லைன் கற்கை நடவடிக்கைக்கு தாய் ஒருவர் உதவி செய்துள்ளார்.

திடீரென அடுத்த அறைக்கு சென்ற தாய் அங்கு விழுந்து கிடந்ததை பார்த்த கணவன் மனைவிக்கு என்ன நடந்ததென பார்க்க சென்ற போது அவரும் ஒரு பக்கத்தில் விழுந்து கிடந்துள்ளார்.

கணவர் வீட்டிற்கு முன்னால் உள்ள அறையில் விழுந்த நிலையில் காணப்பட்டதால் அவரை உடனடியாக அயலவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

எனினும் குறித்த பெண் அதற்கு முன்னரே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த பெண்ணின் கையில் மின்சாரம் தாக்கியதாக சந்தேகிக்கும் அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை ராகம வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments

Powered by Blogger.