பிரித்தானியாவில் அதி உச்சம் கண்ட கொரோனா பலி எண்ணிக்கை!
ஐரோப்பாவிலேயே 100,000 கொரோனா உயிர் பலிகளை கொண்ட முதல் நாடாக பிரித்தானியா விளங்குகின்றது.
பிரித்தானியாவில் 100,162பேர் இதுவரை கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள்.
நாட்டில் ஒரு இலட்சத்திற்கும் மேல் உயிரிழப்பு பதிவாகியுள்ளதால் மிகவும் வருந்துவதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு நாட்களில், சராசரியாக நாளொன்றிற்கு 1,000க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்கள்.
உலக அளவில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் மெக்சிகோவைத் தொடர்ந்து 100,000 கொரோனா உயிரிழப்புகளை சந்தித்த ஐந்தாவது நாடு பிரித்தானியா ஆகும்.
No comments