கடலில் நீராடச் சென்ற தேரர் ஒருவருக்கு நேர்ந்த கதி
இலங்கையில் காலி கடலில் நீராடச் சென்ற தேரர் ஒருவர் இன்று நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார்.
குறித்த தேரர் காலி கோட்டையின் கலங்கரை விளக்கத்திற்கு அருகே நீராட சென்ற போதே அவர் இவ்வாறு மாயமாகியுள்ளார்.
17 வயதான குறித்த தேரர் மேலும் 3 தேரர்களுடன் நீராடச் சென்றுள்ளார் என விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
அந்த தேரரை தேடும் பணியை கடற்படையின் நீச்சல் குழு ஆரம்பித்துள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணையை காலி காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments