இலங்கை சாரதி அனுமதி பத்திரம் பெற எதிர்பார்ப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கையில் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம நேற்று (28) இதனை தெரிவித்தார்.
அதன்படி, கனரக வாகன அனுமதிப் பத்திரங்களைப் பெற விரும்புவோரின் இரத்த மாதிரிகள் சட்டவிரோத போதைப்பொருட்களுக்காக பரிசோதிக்கப்படும்.
இந்த நடவடிக்கை 2021ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ளது.
No comments