Header Ads

பச்சிளம் குழந்தையை கடித்துக்குதறிய தெருநாய்! அதிர்ச்சியூட்டும் சம்பவம்

 


இந்தியாவில் கடலூ்ா மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அருந்ததியர் காலனியில் 12 ஆம் திகதி காலை தெருநாய் ஒன்று, பச்சிளம் ஆண் குழந்தையை வாயில் கவ்வியபடி ஓடி வந்துள்ளது.

அதன் பின்னால் 3 தெருநாய்கள் ஓடி வந்துள்ளன.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குழந்தையை மீட்க நாய்களை விரட்டி கற்களை எடுத்து அடித்துள்ளனர்.

இதனால் அங்குள்ள முட்புதருக்கு அருகே குழந்தையை போட்டுவிட்டு நாய்கள் ஓடிவிட்டன.

இதையடுத்து அருகே சென்று அப்பகுதி மக்கள் பார்த்த பிறந்து சிலமணி நேரமே ஆன அந்த ஆண் குழந்தை, தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் காணப்பட்டது.

மேலும் குழந்தையின் இடது கையை நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறி தின்றுள்ளது

தகவல் அறிந்த, திட்டக்குடி பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருக்கலைப்பு என்பது வழக்கமானது.

கருக்கலைப்பின் போது, எடுக்கப்படும் குழந்தைகளை வெள்ளாற்றில் புதைத்து வருகிறார்கள்.

அவ்வாறு ஆற்றில் புதைத்த குழந்தையை நாய்கள் தூக்கி வந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திட்டக்குடி பொலிசார் பல்வேறு பல விதங்களில் விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.