Header Ads

கொழும்பு பேருந்துக்குள் நடந்த கொலை சம்பவம்! அதிர்ச்சியில் பயணிகள்

 


கொழும்பு தனியார் பேருந்தொன்றின் வழிநடத்துனரை இன்னொர் பேருந்தின் வழிநடத்துனர் கூர்மையான ஆயுதத்தினால் குத்தி கொலை செய்த சம்பவம் வெலிகம பெலேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் சொகுசு பேருந்தொன்றின் வழிநடத்துனர் அதே பேருந்தில் பயணித்த வேறொரு பேருந்தின் நடத்துனரினால் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 3.50 மணிக்கு கூர்மையான ஆயுதத்தினால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்த வழிநடத்துனர் வெலிகம பெலேன பிரதேசத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதுடன், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதே பேருந்தில் வந்த சந்தேக நபர் குறித்த நடத்துனரை கூர்மையான ஆயுதத்தால் குத்தி, பேருந்தில் இருந்து இறங்கி பெலேன சுற்றுவட்டப் பகுதியில் தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த காயமடைந்த குறித்த நபர் அந்த பேருந்து மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட குறித்த நபர் 51 வயதுடையவர் எனவும் அந்த பேருந்தின் உரிமையாளர் எனவும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் 36 வயதுடையவர் எனவும் அவர் தென்பிடிய பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் விசாரணையின் போது மேலும் தெரிய வந்துள்ளது.

குறித்த சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வெலிகம பிரதேசத்தின் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.