வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 245 இலங்கை பணியாளர்கள்
இலங்கையில் கொரோனா தொற்று சமூக ரீதியாக பரவ தொடங்கியதில் இருந்து விமான போக்குவரத்திற்கு தடை விதி்கப்பட்டது.
இந்நிலையில் நாடு திரும்ப முடியாமல் தென்கொரியாவில் சிக்கியிருந்த 245 இலங்கை பணியாளர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர்கள் நாடு திரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தென்கொரியா விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள், விமான நிலையத்தில் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments