பிரித்தானியாவில் ஊரடங்கிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்! 17 பேர் கைது
இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவை அண்டிய பிரதேசங்கள் அனைத்திலும் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில், கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் 17 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த மாதம் 19ஆம் திகதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதனை கண்டித்து, ஹைட் (Hyde) பூங்காவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குதிரைகளில் வலம் வந்த காவலர்கள் அப்புறப்படுத்தினர்.
No comments