Header Ads

கொழும்பில் கொரோனாவுக்கு மத்தியில் அதிகரிக்கும் விபச்சார நடவடிக்கை! பல பெண்கள் கைது

 கல்கிஸ்ஸ பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டு 9 பெண்கள் உட்பட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதியொன்று இயங்கிவருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதற்கமைய கல்கிஸ்ஸ நீதிவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொண்ட பிடியாணை உத்தரவுக்கமையவே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது விடுதியின் முகாமையாளர்களாக செயற்பட்டதாக இரு வரும் , அதற்கு உதவிய 9 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களனி, மொறட்டுவ, தொம்பே, இரத்தினபுரி, சீனக்குடா, வேயங்கொட, பியகம, தலவத்துகொட , அம்பலந்தொட்ட , வெலிமட மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 22 – 62 வயதுக்கு இடைப்பட்ட 11 சந்தேக நபர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.