இலங்கையில் மேலும் அதிகரித்த கொரோனா மரணங்கள்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 68 மற்றும் 75 வயதுகளையுடைய இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த 68 வயதான பெண்ணொருவர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் ஜனவரி மாதம் 3ஆம் திகதி மரணமானார்.
மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றுடன் சுவாசத் தொற்று நோய் நிலைமையெனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 75 வயதானப் பெண்ணொருவர் ஜனவரி மாதம் 2ஆம் திகதி களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை மரணமானார்.
மரணத்திற்கான காரணம் கொரோனா தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை மற்றும் மூச்சிரைப்பு நோய் நிலைமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.
No comments