Header Ads

இலங்கையில் தீவிரமடையும் கொரோனா தொற்று! நேற்றைய நோயாளர்களின் விபரம்



இலங்கையில் நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) அடையாளம் காணப்பட்ட 695 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதில் 193 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 147 பேர் கொழும்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு 56 பேர் கண்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் காலி மற்றும் களுத்துறையில் தலா 34 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கேகாலையில் 25 பேருக்கும் வவுனியாவில் 23 பேருக்கும் மன்னாரில் 20 பேருக்கும் குருநாகலில் 18 பேருக்கும் இரத்தினபுரி மற்றும் மாத்தறையில் 17 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை அம்பாறையில் 16 பேருக்கும் ஹம்பாந்தோட்டையில் 10 பேருக்கும் பதுளையில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 51 ஆயிரத்து 594 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 44 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளதுடன் 7 ஆயிரத்து 80 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 255 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

No comments

Powered by Blogger.