Header Ads

இறுதி சடங்கில் கலந்துகொண்ட 23 பேருக்கு நேர்ந்த கதி



 இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் முராத் நகரில் உள்ளூர்வாசியொருவரின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பெரும்பாலான மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த மயானத்திற்கு வந்திருந்தனர்.

இதன்போது தொடர்ந்து பெய்த அடை மழைக் காரணமாக இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பலர் கட்டிடத்திற்குள் ஒதுங்கியுள்ளனர்.

இதன்போதே கூரை இடிந்து வீழ்ந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 23 பேர் உயிரிழந்ததுடன், ஏனைய 15 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டும் உள்ளனர்.

அதேநேரம் மீட்புப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.