குப்பைத் தொட்டியில் வீசியெறியப்பட்ட பச்சிளம் குழந்தை! தாயார் கைது
ஜேர்மனியின் Regensburg நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று குப்பைத்தொட்டியில் இருந்து பச்சிளம் குழந்தையின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சனிக்கிழமை தகவல் வெளியிட்ட பொலிசார், தற்போது குழந்தையின் தாயாரை கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குழந்தையின் தாயார் 24 வயதான அந்தப் பெண் மருத்துவமனையில் இருப்பது பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
குழந்தையின் உடற்கூராய்வில் இயற்கையான மரணம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், குழந்தையின் மரணத்திற்கு காரணமான பின்னணி தொடர்பில் பொலிஸ் தரப்பு விசாரணை மேற்கொள்கின்றது.
மேலும், இந்த வழக்கு தொடர்பில் தாயாரிடமும், குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments