Header Ads

விலங்குப் பண்ணையில் மேற்கொண்ட பரிசோதனையால் ஏற்பட்ட விளைவு!



 ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடாவில் கொரோனா தொற்று mink மூலம் அதிவிரைவில் மனிதர்களிடையே பரவுகின்றது.

இந்நிலையில்உலகின் பல நாடுகளில் கொரோனா பரவல் காரணமாக பல மில்லியன் mink வகை விலங்குகள் கொல்லப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள mink என்னும் விலங்குகளை வளர்க்கும் ஒருவரது பண்ணையில் பணி புரியும் எட்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

எங்கிருந்து இந்த கொரோனா பரவியது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பண்ணையிலுள்ள mink விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அந்த பரிசோதனையில், பண்ணையிலுள்ள 15,000 விலங்குகளில் இறந்த 200 விலங்குகளுக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

ஆகவே, தன் பண்ணையிலுள்ள 1,000 விலங்குகளை கொல்வது என முடிவு செய்துள்ளார்.

கனடாவின் தலைமை கால்நடை மருத்துவரான Dr. Rayna Gunvaldsen இது குறித்து தெரிவிக்கையில் அரசு அந்த விலங்குகளைக் கொல்ல உத்தரவிடவில்லை.

என்றபோதிலும் அது அந்த பண்ணையின் உரிமையாளரின் தனிப்பட்ட முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.