Header Ads

திருகோணமலையில் 14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்!

 


திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று இவ்வாறு உத்தரவிட்டார்.

தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பெற்றோர்களுக்கு தெரியாமல் 14 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுதியதாக தெரிவித்து சிறுமியின் பெற்றோர்களினால் மூதூர் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேக நபருக்கெதிராக பிணையாளரை மிரட்டியமை, வீட்டினை உடைத்து திருடியமை மற்றும் திருட்டுப் பொருட்களை வைத்திருந்தமை போன்ற வழக்குகள் மூதூர் நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments

Powered by Blogger.